
சாட்டாகிராமில் வங்கதேசம் - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க புஜாரா - ரிஷப் பந்த் ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.
தொடர்ந்து ரிஷப் பண்ட் 46 ரன்களில் ஆட்டமிழக்க, புஜாரா - ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். இறுதியாக புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் 82 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இறுதியாக இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து புஜாரா கூறுகையில், “நான் சதம் அடிக்கவில்லை என்பது சோகமளிக்கவில்லை. ஏனென்றால் நான் சேர்த்த 90 ரன்களும் அணிக்கு மிக முக்கியமானது. நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். இதனைத் தொடர்ந்தாலே, விரைவில் சதம் அடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு எளிதல்ல.