
இந்தியா, வங்கதேசம் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டு 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது.
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர் ஷிகர் தவன் 3 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன், விராட் கோலி இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க ஆரம்பித்தார்கள். பந்துகள் சரியான வேகத்தில் பேட்டிங்கு வந்ததாலும், ஸ்விங் இல்லாததாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதனால், இஷான் கிஷன் இஸ்டத்திற்கு பேட்டை சுத்தி, மிரட்டலாக விளையாட ஆரம்பித்தார். கூடவே கோலியும் அதிரடி மோடில் இருந்ததால், ரன்கள் பறக்க ஆரம்பித்தது. இதனால், பௌலர்கள் அழுத்தங்களுடன் பந்துவீச வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. தவறான லைன், லெந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசினார்கள்.