
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற பல சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து அணியுடனான இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டதால், இளம் வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது.
தங்களது திறமையை வெளிப்படுத்தி கொள்ள இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாகவே கருதப்பட்டது, ஆனால் டி20 தொடரில் சூர்யகுமார் யாதவையும், ஒருநாள் தொடரில் சுப்மன் கில்லையும் தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொடரில் செயல்படவில்லை.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பியதன் காரணமாக இந்திய அணி ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் மோசமாக இழந்தது. ஒருநாள் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பிய இந்திய அணி கடும் விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நியூசிலாந்து அணியுடனான தொடரின் மூலம் இந்திய அணிக்கு நட்சந்த நல்ல விசயங்களை முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி சுட்டி காட்டியுள்ளார்.