
IND v SA, 1st T20I: Plan was to keep it simple, bowl in the right areas, says Arshdeep Singh (Image Source: Google)
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சின் காரணமாகவும், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அரைசதம் காரண்கன்களாலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றி அசத்தியது.
இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய அர்ஷ்தீப் சிங், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய அர்ஸ்தீப் சிங், டேவிட் மில்லரின் விக்கெட்டை கைப்பற்றியது மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.