Advertisement

இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது - ஷிகர் தவான்!

இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது என போட்டி முடிவுக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 10, 2022 • 10:14 AM
IND v SA, 2nd ODI: Partnership between Ishan, Shreyas was great to watch, says Shikhar Dhawan
IND v SA, 2nd ODI: Partnership between Ishan, Shreyas was great to watch, says Shikhar Dhawan (Image Source: Google)
Advertisement

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் டி காக் 5, ஜனிமேன் மலான் 25 ஆகியோர் ஏமாற்றம் தந்த நிலையில், அடுத்து ராஷா ஹென்ட்ரிக்ஸ் 74, எய்டன் மார்க்கரம் 79  இருவரும் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். தொடர்ந்து கிளாசன் 30, மில்லர் 35 ஆகியோர் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களல் 278/7 ரன்களை சேர்த்தது.

Trending


இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் தவன் 13, ஷுப்மன் கில் 28  ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அடுத்து இஷான் கிஷன் 84 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 93 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 15 பவுண்டரிகள் உட்பட 113 ரன்களை விளாசி அசத்தினார்கள்.

இறுதியில் சஞ்சு சாம்சன் 30 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இதனால், இந்திய அணி 45.5 ஓவர்களில் 282/3 ரன்களை குவித்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய இந்திய அணிக் கேப்டன் ஷிகர் தவன், “டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்பிரிக்க அணிக் கேப்டன் கேசவ் மகாராஜிற்கு வாழ்த்துக்கள். நினைத்ததுபோல், இரண்டாவது இன்னிங்ஸில் பனியின் தாக்கம் இருந்தது. இதனால்தான், தென் ஆப்பிரிக்க பௌலர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என நினைக்கிறேன். இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் பார்ட்னர்ஷிப் அபாரமாக இருந்தது. 

பந்துவீச்சு துறையும் இன்று சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக, அறிமுக வீரர் ஷாபஸ் அகமது அனுபவம் வாய்ந்த பௌலரைப் போல செயல்பட்டார். பவர் பிளேவில் இருந்தே, பௌலர்களை அட்டாக் செய்ய முடிவு செய்துதான் களமிறங்கினோம். பவர் பிளேவில் ரன்களை குவித்தால்தான் மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்கா மீது அழுத்தங்களை போட முடியும் எனக் கருதினோம். அதிரடியாக ஆட முற்பட்டதுதான் நான் செய்த தவறு. அடுத்த போட்டியில் நிச்சயம் பெரிய ஸ்கோர் அடிப்பேன்” எனத் தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement