Advertisement
Advertisement
Advertisement

IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 28, 2024 • 17:35 PM
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி! (Image Source: Google)
Advertisement

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் மூலமாக 436 ரன்களைக் குவித்து, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அசத்தினர்.

Trending


இதில் அதிரடியாக விளையாடி வந்த ஸாக் கிரௌலி 31 ரன்களிலும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை களத்தில் இருந்த ஒல்லி போப் 196 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து இரட்டை சதத்தை அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதனால் இங்கிலாந்து அணி நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸில் 420 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல அவுட்டானது. இந்திய அணி தரப் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 231 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்த ரோஹித் சர்மா 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் 22 ரன்களிலும், அக்ஸர் படேல் 17  ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்களுக்கு என ஆட்டமிழந்தனர். 

இதனால் இந்திய அணி 119 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா - ஸ்ரீகர் பரத் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். தொடர்ந்து இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரீகர் பரத் தன்னுடைய விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் 28 ரன்களைச் செர்த்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது விக்கெட்டை இழக்க, இந்திய அணியின் தோல்வியும் உறுதியானது. இறுதியில் அதிரடியாக விளையாட முயன்ற முகமது சிராஜ் 12 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இந்திய அணி 202 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement