
Cricket Image for IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்? (Image Source: Google)
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை
(மார்ச் 28) நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய
அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில்
வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள்
இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையே தீர்மானிக்கும் மிக முக்கிய போட்டியான
இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.