Advertisement
Advertisement
Advertisement

IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை (மார்ச

Bharathi Kannan
By Bharathi Kannan March 27, 2021 • 23:03 PM
Cricket Image for IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
Cricket Image for IND vs ENG: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்? (Image Source: Google)
Advertisement

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை
(மார்ச் 28) நடைபெற உள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய
அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில்
வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள்
இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Trending


இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரையே தீர்மானிக்கும் மிக முக்கிய போட்டியான
இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் நிச்சயம் ஒரு சில மாற்றங்கள்
இருக்கும் என்றே தெரிகிறது. குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரன்களை வாரி
வழங்கிய குர்ணால் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு கடைசி போட்டிக்கான இந்திய
அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

குல்தீப் யாதவின் இடத்தில் யுஸ்வேந்திர சாஹலுக்கும், குர்ணால் பாண்டியாவின் இடத்தில்
தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் இடம் கிடைக்கலாம் என தெரிகிறது.


Read More

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement