Advertisement

ஒரு அணியாக இது எங்களுக்கு சிறப்பான வெற்றி - ரோஹித் சர்மா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நாங்கள் ஓரணியாக செயல்பட்டதே வெற்றிக்கு முக்கிய காரணம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 20, 2021 • 10:08 AM
Ind vs NZ, 2nd T20I: Harshal is very skillful bowler, he used slower ball really well, says Rohit Sh
Ind vs NZ, 2nd T20I: Harshal is very skillful bowler, he used slower ball really well, says Rohit Sh (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. 

அதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Trending


இந்திய அணி சார்பில் கேஎல் ராகுல் 65 ரன்களும், ரோகித் சர்மா 55 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷல் படேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “ஒரு அணியாக இது எங்களுக்கு சிறப்பான ஆட்டமாக அமைந்துள்ளது. நிச்சயம் இந்த மைதானத்தில் உள்ள கண்டிஷன் ஈசியாக இல்லை என்றாலும் அவர்களை நாங்கள் குறைந்த ரன்களுக்கு சுருட்டியது அற்புதமாக இருந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும். 

ஆரம்பத்திலேயே அவர்கள் நல்ல ஷாட்டுகளை விளையாடினார்கள் அதனால் ரன்கள் வேகமாக வந்தன. இருந்தாலும் நான் எங்களது வீரர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தது என்னவெனில் ஒரு விக்கெட் விழுவது மட்டும்தான். முதல் விக்கெட்டை வீழ்த்தினால் அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதுதான். அதன்படி இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களை கட்டுக்குள் வைத்து இறுதியில் குறைந்த ரன்களுக்கு சுருட்டியது சிறப்பாக இருந்தது.

இந்திய அணியின் பென்ச் ஸ்ட்ரென்த் மிகவும் அற்புதமாக இருக்கிறது. எப்போதுமே வீரர்களுக்கு சுதந்திரம் அளிப்பது முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்றைய போட்டியில் சுதந்திரமாக விளையாடிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது ஒரு புதிய இளம் அணி இந்த அணியில் உள்ள நிறைய வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. எனவே அவர்கள் களத்தில் நேரம் எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது.

Also Read: T20 World Cup 2021

அடுத்த போட்டியில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் நேரம் இது கிடையாது. இந்திய அணிக்கு என்ன தேவையோ அதனை நாங்கள் செய்ய உள்ளோம். இந்திய அணிக்கு தொடர்ந்து நிறைய டி20 போட்டிகள் உள்ளன. எனவே அனைத்து வீரர்களுக்கும் களத்தில் விளையாட நேரம் கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement