
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரினை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நாளை மறுதினம் கான்பூர் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் விராட் கோலி ஓய்வில் இருப்பதன் காரணமாக ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார்.
அதேவேளையில் இரண்டாவது போட்டியின்போது அணியுடன் கேப்டன் விராட் கோலி இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை மறுதினம் துவங்க இருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரரான சுப்மன் கில் அணியில் விளையாடுவார் என்று இந்திய அணியின் துணை கேப்டன் புஜாரா உறுதி செய்துள்ளார்.