
இந்தியா - நியூசிலாந்து மோதிய இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள்ல் 8 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இதன் பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தோல்வியின் விளிம்பிற்கு சென்றுவிட்ட போதும் நியூசிலாந்து அணியை கடைசி ஓவர் வரை பிரேஸ்வெல் அழைத்துச்சென்றதால் ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இந்த பரபரப்பையெல்லாம் விட பாண்டியாவின் விக்கெட் தான் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது. நடுவர்கள் கண்ணை மூடிக்கொண்டு முடிவெடுத்தது போல சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
டேரில் மிட்செல் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா தவறவிட, கீப்பரிடம் சென்றது. அந்த பந்து கீப்பர் டாம் லேதமின் கைகளுக்குள் செல்லும் வரை ஸ்டம்புகளில் எந்தவித விளக்குகளும் எறியவில்லை. ஆனால் அதன்பின் லேதம் தனது கைகளால் ஸ்டம்புகளை தட்டிவிட்டிருந்தார். இதனை கொஞ்சம் கூட கவனிக்காத 3வது நடுவர் போல்ட் அவுட் எனக் கூறினார். பந்து ஸ்டம்புகளுக்கு மேலே சென்றதையும், லேதம் தட்டிவிட்டதையும் காணொளியாக பதிவிட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.