
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி லக்னோவில் நன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தினால் டாஸ் தாமதமாகப் போடப்பட்டு, போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஜென்மான் மாலன் - குயின்டன் டி காக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மாலன் 22 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.