
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அதிரடியாக ஆடிய 21 பந்தில் 34 ரன்கள் அடித்தார். நன்றாக அடித்து ஆடிய இஷான் கிஷன் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஸ்ரேயாஸ் ஐயர் பெரிதாக அடித்து ஆடாவிட்டாலும் 35 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஆனால் ரிஷப் பண்ட்(5) மற்றும் ஹர்திக் பாண்டியா(9) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அக்ஸர்படேலும் 10 ரன் மட்டுமே அடித்தார்.