Ind vs sa 2nd t20i
‘பாம்பும் போட்டியை ரசித்து பார்க்க வந்துள்ளது’ - சர்ச்சை பதிலையளித்த ஏசிஏ செயலாளர்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2ஆவது டி20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட் செய்த போது ஆடு களத்திற்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனால் ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியின் 8ஆவது ஓவர் வீசப்படுவதற்கு முன்னதாக பாம்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. அதனால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த பாம்பை பிடிக்க மைதான ஊழியர்கள் தேவையான கருவிகளுடன் விரைந்து சென்றனர்.