Advertisement

இவர்கள் இருவரும் தான் எங்களுக்கு தலைவலி - கீகன் பீட்டர்சன்!

விராட் கோலி, புஜாரா ஆகியோர் எங்களுக்கு தலைவலியை ஏற்படுகின்றனர் என தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 13, 2022 • 13:16 PM
 IND vs SA: Virat Kohli Will Be The Big Wicket – Keegan Petersen Ahead Of Day 3
IND vs SA: Virat Kohli Will Be The Big Wicket – Keegan Petersen Ahead Of Day 3 (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கீகன் பீட்டர்சன் 72 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

Trending


இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது. இதனால் 70 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  புஜாரா 9 ரன்னுடனும், விராட் கோலி 14 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் பேசிய கீகன் பீட்டர்சன், ”விராட் கோலியும் புஜாராவும் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றனர். மூன்றாம் நாள் காலையில் அவரகளது விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவதே எங்கள் இலக்கு. 

ஆனால் தற்போது களத்தில் உள்ள விராட் கோலி மற்றும் புஜாராவின் ஆட்டம் கடந்த சில போட்டிகளில் எங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விட்டன” என தெரிவித்தார்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement