Advertisement
Advertisement
Advertisement

அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அஸ்வின் தனது திறமையை நிரூபித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 15, 2023 • 21:47 PM
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம்
அஸ்வினை பாராட்டிய பிரக்யான், சபா கரீம் (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 12 ஆம் தேதி டோமினிக்காவில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருக்கிறது . 

இப்போட்டியில், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் என இந்த டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் . இதன் மூலம் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அஸ்வினை அணியில் சேர்க்காதது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது . 

Trending


இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார் அஸ்வின் . இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் சபா கரீம் ஆகியோர் அஸ்வினை வெகுவாக பாராட்டி இருக்கின்றனர். 

ரவிச்சந்திரன் அஸ்வினின் கம்பேக் பற்றி பேசியிருக்கும் பிரக்யான் ஓஜா, “சாம்பியன் வீரர்கள் அவர்களுக்கு எது தேவையோ அதனை தங்களது ஆட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்வார்கள் . ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த போட்டியில் 12 விக்கெட் கை வீழ்த்தியதன் மூலம் தன்னை ஒரு சாம்பியன் என்று நிரூபித்திருக்கிறார் . கடந்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைத்தவுடன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஐந்து விக்கெட் களுக்கு மேல் வீழ்த்தி தான் யார் என்பதை நிரூபித்துள்ளார் அஸ்வின். இதன் மூலம் உலகில் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக நான் ஏன் இருக்கிறேன் என அனைவருக்கும் சுட்டிக்காட்டி இருக்கிறார் . வாயால் பேசிக் கொண்டிருப்பதை விட செயலின் மூலம் செய்து காட்டுவதில் சிறந்தது என அஸ்வின் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்” என தெரிவித்தார் .

இதையடுத்து பேசிய சபா கரீம் ” அஸ்வினின் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவரை ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றி இருக்கிறது . இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் பலகீனம் அறிந்து அதற்கு ஏற்றார் போல் ஆங்கில்களை மாற்றியவர் பந்து வீசிய விதம் அஸ்வின் எவ்வாறு ஒரு போட்டியில் இருந்து கற்றுக்கொள்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது . அவர் பத்து வருடங்களுக்கு மேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் ஒவ்வொரு போட்டியிலும் புதியதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டு அதனை தனக்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்” என தெரிவித்திருக்கிறார் .


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement