Advertisement

ஸ்ரேயாஸ் ஐயருக்கு வார்னிங் கொடுத்த பிசிசிஐ!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்த போதிலும் பிசிசிஐ அவருக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 24, 2022 • 12:28 PM
ind vs wi you should face short ball without fear bcci official gives
ind vs wi you should face short ball without fear bcci official gives (Image Source: Google)
Advertisement

இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக படுமோசமாக திணறினார். பௌலர் பவுன்சர்தான் வீசப் போகிறார் என்பதை தெரிந்தும், அதற்கேற்றாற்போல் கால்களை நகர்த்தி நின்றும் ஷ்ரேயஸ் ஐயரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

இதனால் இவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு வழங்க கூடாது. மாற்று வீரரை களமிறக்குவதுதான் நல்லது என பலர் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படவில்லை. ஓரங்கட்டப்பட்டார். இதனால், இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்பட்ட நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது.

Trending


வெஸ்ட் இண்டீஸ் அணியில் பௌலர்கள் சிறப்பான முறையில் பவுன்சர்களை வீசுவார்கள் என்பதால், ஷ்ரேயஸ் ஐயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்பட்டார். மிடில் ஓவர்களின்போது களமிறங்கிய அவருக்கு எதிர்பார்த்தபடியே பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி மிரட்டினார்கள். 

வழக்கம்போல ஸ்ரேயஸ் ஐயரும் இதனை எதிர்கொள்ள திணறினார். அவர் களமிறங்கிய சமயம் மிடில் ஓவர்கள் என்பதால், அப்போது ஸ்பின்னர்கள்தான் அதிகமுறை பந்துவீசும் நிலை இருந்ததது. ஸ்ரேயஸ் ஐயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக வியக்கவைக்கும் வகையில் விளையாடக் கூடியவர் என்பதால், ஸ்பின்னரைகளை விரட்டிவிரட்டி அடித்தார்.

இதனால், ஸ்கோரும் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்ரேயஸ் ஐயரும் அரை சதம் கடந்து அசத்தினார். பவுன்சர் வீக்னஸ் இருந்தும், மிடில் ஓவர்கள் என்பதால் ஸ்ரேயஸ் ஐயர் தப்பித்தார். இதே ஓபனர்கள் தவன், கில் இருவரில் ஒருவர் முன்கூட்டியே ஆட்டமிழந்திருந்தால், ஸ்ரேயஸ் ஐயர் அதிகமுறை வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்திருக்கும். வழக்கம்போல பவுன்சருக்கு எதிராக சொதப்பி, விரைவில் ஆட்டமிழந்திருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் முதல் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற மீட்டிங்கில், இணையம் வழியாக கலந்துகொண்ட பிசிசிஐ நிர்வாகிகள், ஸ்ரேயஸ் ஐயர் இப்போட்டியில் பவுன்சருக்கு எதிராக திணறியது குறித்து சுட்டிக்காட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இதே நிலைமை நீடித்தால் அடுத்து உள்ளூர் தொடர்களில் விளையாடி தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே, மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என அதிரடியாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அடுத்த இரண்டு போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டாவது போட்டி இன்று, இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement