
India all-rounder Krunal Pandya’s Twitter account gets hacked, hacker asks to send him bitcoin in tw (Image Source: Google)
இந்திய அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களாக பாண்டியா சகோதரர்கள் வலம் வருகின்றனர். இவர்கள் இருவருமே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள்.
இந்நிலையில் குர்ணால் பாண்டியாவின் சமூக வலைதளபக்கம் திடீரென அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிரபலங்களின் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவுகள் எப்போதாவது வரும். ஆனால் இன்று திடீரென குர்னால் பாண்டியாவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து மட்டும் மோசமான பதிவுகள் அடுத்தடுத்து போடப்பட்டன.
ரசிகர்கள் மிகவும் தகாத வார்த்தைகளில் திட்டுவது போன்றும் பதிவுகள் இடம்பெற்றன. இது அனைவருக்கும் ஆதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின்னர் தான் அவரின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.