Advertisement

ஒரே இரவில் வழிகாட்டிக்கான தேவை ஏன் வந்தது? - அஜய் ஜடேஜா!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2021 • 14:33 PM
India Appointing A Mentor For T20 World Cup Surprises Jadeja, Asks 'What Happened Overnight'
India Appointing A Mentor For T20 World Cup Surprises Jadeja, Asks 'What Happened Overnight' (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டது. 

இதில் தோனி டி20 உலகக் கோப்பை போட்டிக்கு மட்டுமே ஆலோசகராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டது தனது ஆச்சரியமாக உள்ளதென முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Trending


இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எம்எஸ் தோனியின் என்னை விட பெரிய ரசிகர் யாரும் இல்லை. நான் வெளியேறுவதற்கு முன்பு அடுத்த கேப்டனை உருவாக்கிய முதல் கேப்டன் எம்எஸ் தோனி என்று அவர்கள் நம்புகிறார்கள் .

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆனால் இந்திய அணியை உலக நம்பர் ஒன் அணியாக அழைத்துச் சென்ற ஒரு பயிற்சியாளர் இருக்கிறார். அப்படி இருக்கையில் ஒரே இரவில் அணியின் வழிகாட்டிக்கான தேவை ஏன் வந்தது? இது என்னை கொஞ்சம் ஆச்சரியப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement