
நடப்பாண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .
இத்தொடரின் முதல் போட்டியில் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. மேலும், உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் தற்போதைய உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? எந்தெந்த அணிகள் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்பது போன்ற கருத்துக்கணிப்புகளை முன்னாள் வீரர்களும் துவங்கி விட்டனர்.