-mdl.jpg)
India Beat Hong Kong By 40 Runs; Advance To Super Four Stage Of Asia Cup 2022 (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி - ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சேஸ் செய்தால் தான் வெற்றி கிடைக்கும் என்ற ஆடுகளத்தில் இந்தியா பேட்டிங் செய்தது.
மேலும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கேஎல் ராகுல் , ரோஹித் சர்மா ஜோடி களத்துக்கு வந்தது. அப்போது ஆடுகளம் தோய்வாக இருந்ததால், பேட்டிங் செய்ய கொஞ்சம் சிரமமாக இருந்தது.
எனினும் அதனை சமாளித்து ரோகித் சர்மா அதிரடியை காட்டினார். 13 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்சரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடினார்.