Advertisement

விராட்டை போன்று மற்றவர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் - அஸ்வின்

இங்கிலாந்து மைதாங்களில் விராட் கோலியைப் போன்று மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் என இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 02, 2021 • 23:17 PM
India Can Win In England If Other Batsmen Make Runs Around Virat Kohli: Ravichandran Ashwin
India Can Win In England If Other Batsmen Make Runs Around Virat Kohli: Ravichandran Ashwin (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

அதையடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி பெரிய அளவில் சாதித்தது கிடையாது. கடந்த சீசனில் விராட் கோலி சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் தொடரை 1-4 என இழந்தது.

Trending


தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி ஆர்வம்காட்டி வருகிறது.  ஆனால் இங்கிலாந்தில் சாதிக்க வேண்டும் என்றால் விராட் கோலியுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் ஒட்டிக்கொண்டு ரன்கள் குவிக்க வேண்டும் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அஸ்வின்‘‘அவர்களுடைய மைதானத்தில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். அவர்களுடைய மைதானங்களில் அவர்கள் எவ்வாறு சிறந்தவர்கள் என்பதை காண்பிப்பார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார். ஆனால் தற்போதுள்ள இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. இருப்பினும் விராட் கோலியுடன் மற்ற பேட்ஸ்மேன்கள் இணைந்து ரன்கள் குவித்துவிட்டால், தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு உள்ளது.

அதேபோல் சிறந்த வீரர்களுக்கு எதிரான பந்து வீச்சு ஐடியா, மகிழ்ச்சியான சவாலாக இருக்கும். முதல் பேட்ஸ்மேன் முதல் கடைசி பேட்ஸ்மேன் வரைக்கும் ஒட்டுமொத்தமாக நல்ல விதத்தில் தயாராகி விடுவேன் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement