-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டதால் கோப்பையை வெல்லும் என்றெல்லாம் அந்த தொடருக்கு முன்பாக பேசப்பட்டது.
ஆனால் அந்த தொடரின் லீக் போட்டிகளிலேயே இந்திய அணி அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக ரோஹித் சர்மா தற்போது புதிய கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
எனவே இந்த டி20 உலக கோப்பை தொடரை கட்டாயம் இந்திய அணி கைப்பற்றியாக வேண்டிய நிலையில் தற்போது தொடர்ச்சியாக அணியில் பல மாறுதல்களை செய்து பலமான அணியாக வடிவமைத்து வருகிறது.