
India give Jhulan Goswami a fitting farewell with 3-0 series win over England (Image Source: Google)
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து மகளிர் அணி வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்தது.
முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி நேற்று லண்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் பின்வரிசையில் தீப்தி சர்மா ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். ஸ்மிருதி மந்தனா 50 ரன்களுக்கும், தீப்தி ஷர்மா 68 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மற்ற அனைவருமே சொதப்பியதால் இந்திய அணி வெறும் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.