
"India has always been a second home for me"- Brett Lee donates 1 Bitcoin to oxygen supply for COVID (Image Source: Google)
இந்தியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான பிரெட் லீ, இந்திய அரசிற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒரு பிட் காயினை ( இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சம்) நிதியுதவியாக அளித்துள்ளார்.