Advertisement

பிசிசிஐ கோரிக்கையை ஏற்ற இசிபி - ரசிகர்கள் மகிழ்ச்சி!

பயிற்சி போட்டிகளை நடத்தக்கோரி  பிசிசிஐ வைத்த கோரிக்கைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan July 02, 2021 • 18:38 PM
India Likely To Play 'Warm Up Match Against A County Select XI' Ahead Of England Tests
India Likely To Play 'Warm Up Match Against A County Select XI' Ahead Of England Tests (Image Source: Google)
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்திய வீரர்களுக்காக பிசிசிஐ முக்கிய கோரிக்கை ஒன்றை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் வைத்தது.

Trending


இந்த போட்டிகள் தொடங்க இன்னும் 5 வாரங்கள் உள்ளதால் இந்திய அணி வீரர்கள்,  இங்கிலாந்து அணியுடன் முதல் தர பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்ய பிசிசிஐ கோரிக்கை வைத்திருந்தது.

முக்கிய போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி, முதல் தர பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடும். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி தங்களுக்குள்ளான போட்டியில் மட்டுமே விளையாடியது. முதல் தர பயிற்சி போட்டி நடத்தப்படவில்லை. இதன் விளைவாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்தது என பேச்சுக்கள் உலா வருகின்றன.

இந்நிலையில் பயிற்சி போட்டிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து அணிகள் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தின் கவுண்டி அணிகளுடனும் இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு போட்டிகளும் டர்ஹாம் நகரில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement