-mdl.jpg)
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டி தரம்சாலா மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சர்துல் தாக்கூர் வெளியே போக, சூரியகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இருவர் உள்ளே வந்தார்கள். நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
வேகப் பந்துவீச்சுக்கு ஆரம்பத்தில் சாதகமான சூழ்நிலையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே ரன் ஏதும் இல்லாமலும், வில் யங் 17 ரங்களிலும் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்சல் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். சமி ஓவரில் ரச்சின் ரவீந்தரா கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவற விட்டு அதிர்ச்சி அளித்தார்.
மிகச் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இருவரும் அரை சதத்தை தாண்டினார்கள். மீண்டும் முகமது ஷமி பந்துவீச்சுக்கு வந்து ரச்சின் ரவீந்தராவை 75 ரன்களுக்கு வெளியேற்றினார். இந்த ஜோடி 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடிய டேரில் மிட்சல் சதம் அடித்தார். 35 வது ஓவருக்கு மேல் இந்திய பந்துவீச்சாளர்கள் திரும்பி வந்து நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பதிலடி தர ஆரம்பித்தார்கள்.