
பார்வையற்றவர்களுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் தொடங்கவிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வருமா என்பது சந்தேகமாக இருந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அரசு விசா தராமல் நிராகரித்துள்ளது. இது இரு நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில், இந்தியாவின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியை நிலைகுலைய வைத்துள்ளது. விளையாட்டை அரசியலுடன் இந்தியா கலக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள அந்த வாரியம், இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.