-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது சூப்பர் 12 சுற்றினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தொடரில் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர் கொள்ள இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணி இந்திய அணியை வீழ்த்தி இருந்ததால் அதற்கு பதிலடி தரும் விதமாக இம்முறை பாகிஸ்தானை வீழ்த்தும் முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மும்முரமாக தயாராகி வருகிறது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடக்கூடிய 11 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அதன்படி ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரை துவக்க வீரர்களாகவும், மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். அதேபோன்று பின்வரிசையில் பினிஷர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹர்பஜன் சிங் சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹல் மற்றும் அக்சர்பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளார்.