
India Vs South Africa Ruturaj Gaikwad Hit 5 Fours Against Anrich Nortje (Image Source: Google)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
துவக்க முதலே ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டத் துவங்கினார். அதிலும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய ஐந்தாவது ஓவரில் அடுத்தடுத்து ஐந்து பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.
தொடர்ந்து பந்துகளை நான்கு புறமும் சிதறடித்த ருத்துராஜ் 30 பந்துகளில் அரை சதம் அடித்தார். சர்வதேச போட்டிகளில் இது அவரது முதல் அரை சதம் என்பது குறிப்பிடத்தக்கது.