
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இத்தொடரானது தற்சமயம் சமநிலையில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தொடரில் முன்னிலை பெறுவதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிகான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து கையில் இருந்த வெற்றியைக் கோட்டை விட்டுள்ளது. இதனால் நாளை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன்படி நாளைய போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் செர்க்கபட அதிகவாய்ப்புள்ளதாக தெரிகிறது.