
வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரின் போது ஓய்வுக்காக வெளியேறிய விராட் கோலி, இலங்கை டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. நேரடியாக இலங்கை அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதாக அறிவித்தார்.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் நடைபெறவுள்ளது. இதற்காக நேற்று மொஹாலி சென்றடைந்த விராட் கோலி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு ஏற்கனவே ரிஷப் பந்த், அஸ்வின், உமேஷ் யாதவ், சுப்மன் கில், முகமது ஷமி, ஹனுமா விஹாரி ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோலி வலைப்பயிற்சிக்கு சென்ற போது தான் சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. மைதானத்தின் வாயில் அருகே நின்றுக்கொண்டிருந்த இளம் ரசிகர்கள் சிலர் கோலியை பார்க்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். மேலும் அவரின் ஆட்டோகிராஃபும் போட்டு தருமாறு கோரி வந்தனர். இது உள்ளே இருந்த கோலிக்கு எப்படியோ கேட்டுள்ளது.