
India Will Eye To Win The Final Battle & Clinch Series Against England At Manchester (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 2ஆவது ஆட்டத்தில் ரன் எடுக்காமலேயே திரும்பினார். அதேபோல் முன்னாள் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறார்.