
அண்டர் 19 மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்திய மகளிர் யு19 - இலங்கை மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இலங்கை அணி வீராங்கனைகாள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் கேப்டன் விஷ்மி குனரத்னே (25), உமாயா ரதனாயகே (13) ஆகியோரைத் தவிற மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றையிலக்க ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் யு19 அணி 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பர்ஷவி சோப்ரா 4 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.