
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கான மூன்றாவது ஒருநாள் போட்டி
புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 48.2 ஓவர்களில் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக
களமிறங்கிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இணை நிதானமாக நின்று ஆடி
ரன்களை குவித்தனர். இந்த இணை 5 ஓவர்களில் 31 ரன்கள், 10 ஓவர்களில் 65
ரன்கள் என சீராக ரன்னின் வேகத்தை அதிகரித்து வந்த நிலையில் 14
ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. ஒருநாள் போட்டிகளில் சச்சின் - கங்குலி (21
முறை) இணைக்கு அடுத்தப்படியாக, அதிக முறை 100 ரன்களை சேர்த்த
பாட்னர்ஷிப் என்ற மைல்கல்லை ரோஹித் - தவான் (17 முறை) இணை
எட்டியுள்ளது. இந்த போட்டியில் தவான் 42ஆவது ஒருநாள் அரை சதத்தை
பூர்த்தி செய்தார்.
இதனையடுத்து நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித்
37(37) ரன்களுக்கு, அதில் ரஷித் சுழலில் சிக்கி போல்டானார். அடுத்த
களமாடிய கோலி நிதானம் காட்ட, தவான் அடித்து ஆடி வந்தார். அப்போது
ரஷித் வீசிய 16ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து 67 (56) ரன்னில்
தவான் வெளியேறினார்.