
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
இந்நிலையில் 240 ரன்கள் இலக்கை விரட்டியபோது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எல்கர் 96 ரன்களும் வான் டர் டுசென் 40 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். ஆட்ட நாயகனாக எல்கர் தேர்வானார். 3ஆவது டெஸ்ட், கேப் டவுனில் ஜனவரி 11 அன்று தொடங்குகிறது.
இந்நிலையில் கோலிக்குப் பதிலாக இந்திய அணியின் கேப்டனாகப் பணியாற்றிய கேஎல் ராகுல் பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.