
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.
ஆனாலும் இந்திய வீரர்களான ரஹானே, புஜாரா சமீபகாலமாகச் சரியாக விளையாடாததால் இருவரையும் அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, “ரஹானே நன்றாக விளையாடுகிறாரா இல்லையா என நான் முடிவெடுக்க முடியாது. கடினமான சூழலிலும் முக்கியமான ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டியது முக்கியம். அழுத்தம் காரணமாக, அடுத்தது என்ன என வீரர் கவலைப்படும்படியான நிலைமையை அணியில் கொண்டு வர மாட்டோம்.