Advertisement

மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று இலங்கை சென்றடைந்துள்ளது.

Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசிய கோப்பை 2024: இலங்கை சென்றடைந்தது இந்திய மகளிர் அணி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 16, 2024 • 11:43 PM

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் இலங்கையில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், யுஏஇ, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கொற்கவுள்ளன. அதன்படி ஜூலை 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 16, 2024 • 11:43 PM

மேலும் இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து லீக் சுற்றில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அதன்படி இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாள் மற்றும் யுஏஇ அணியும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் லீக் சுற்றின் முடிவில் குரூப் அட்டவணையில் டாப் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending

மேற்கொண்டு சமீபத்தில் இத்தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டிருந்தது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் யுஏஇ மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இந்திய அணி 19ஆம் தேதி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியையும், ஜூலை 21ஆம் தேதி இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியையும், ஜூலை 23ஆம் தேதி மூன்றாவது போட்டியில் நேபாள் அணியையும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அணிக்கான துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா, ரேனுகா சிங், தீப்தி சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர். மேலும் ரிஸர்வ் வீராங்கனைகளாக ஸ்வேதா ஸ்ரேவத், சைகா இஷாக், தனுஜா கன்வர், மேக்னா சிங் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்திய மகளிர் அணியானது இன்றைய தினம் இலங்கை சென்றடைந்தது. அதன்படி இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உள்பட அனைத்து வீராங்கனைகளும் இலங்கை சென்றடைந்துள்ளனர். இதனையடுத்து இந்திய அணி வீராங்கனைகள் நாளை முதல் தங்களது பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா சேத்ரி, பூஜா வஸ்திரேகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஸ்ரெயங்கா பாட்டீல், சஞ்சனா சஜீவன்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ரிஸர்வ் வீராங்கனைகள்: ஸ்வேதா ஸ்ரேவத், சைகா இஷாக், தனுஜா கன்வர், மேக்னா சிங்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement