மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்!
குடும்ப சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று மீண்டும் அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இந்திய அணியில் இணையும் ரவிச்சந்திரன் அஸ்வின்! (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில் தான் அம்மாவின் உடல்நிலை பிரச்சனை காரணமாக சென்னை திரும்பிய அஸ்வின் தற்போது மீண்டும் அணியில் இணைவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதேசமயம் இன்று நடைபெற்று வரும் நான்காம் நாள் உணவு இடைவேளைக்குள் அஸ்வின் ராஜ்கோட் வந்தடைவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
முன்னதாக இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸாக் கிரௌலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் இந்திய அணி தரப்பில் இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதன் காரணமாக அஸ்வினின் பந்துவீச்சு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.Ashwin is set to rejoin Team India By Lunch Today!#INDvENG #India #England #RavichandranAshwin pic.twitter.com/sDCjExiwaX
— CRICKETNMORE (@cricketnmore) February 18, 2024
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News