Advertisement

மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!

காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 25, 2023 • 14:59 PM
மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா!
மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் - டெம்பா பவுமா! (Image Source: Google)
Advertisement

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. பாக்ஸிங் டே போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளும் தயாராகியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக அவர்களது ஊரில் தோற்கடித்து இந்தியா சாதனை படைக்கும் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்தாண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை சுவைத்த இந்தியா தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருப்பதால் இத்தொடரில் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் 2023 உலகக்கோப்பையில் 24 விக்கெட்டுகள் எடுத்து எதிரணிகளை தெறிக்க விட்ட முகமது ஷமி இத்தொடரில் காயத்தால் விலகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

Trending


இந்நிலையில் காயத்தால் விலகிய முகமது ஷமிக்கு பதிலாக களமிறங்கப் போகும் மாற்று வீரர் கூட மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் தரத்தை இந்திய அணி கொண்டிருப்பதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா கூறியுள்ளார். எனவே சொந்த மண்ணில் இந்தியாவிடம் தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைக்க தாங்கள் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கிரிக்கெட்டராக நீங்கள் சிறந்தவர்களுக்கு எதிராக அசத்த விரும்புவீர்கள். அந்த வகையில் முகமது ஷமி சிறந்த பவுலர்களில் ஒருவராக இருக்கிறார். அவரை போன்ற பவுலர்களை கொண்ட இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ளோம். ஆனால் இந்திய அணியில் ஆழமான திறமை இருப்பதால் மாற்று வீரராக வருபவர் கூட உங்களை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்குவார் என்பதை நம்ப வேண்டும்.

சொந்த மண்ணில் விளையாடும் எங்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் என்பதை அறிவோம். அதனால் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களை விட நாங்கள் விரைவாக இங்குள்ள சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்வோம் என்று எதிர்பார்க்கிறேன். அதே சமயம் இந்திய அணியில் ஷமி இல்லாமல் போனாலும் அவர்கள் இப்போதும் வலுவான அணியாக இருக்கிறார்கள்.

சொல்லப்போனால் கடந்த 5 முதல் 10 வருட காலங்களில் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான பவுலிங் அட்டாக்கை கொண்டிருப்பதன் காரணத்தாலேயே நிறைய வெற்றிகளை பெற்றுள்ளார்கள். எனவே இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த சவாலான தொடரில் நாங்கள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement