
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறியது.
போட்டிக் கட்டணத்தில் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக மகளிர் கிரிக்கெட் வீரர்களையும் கொண்டு வர முடிவு செய்திருப்பது பல வகையிலும் புரட்சிகரமான முடிவாக பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மூத்த மகளிர் கிரிக்கெட் வீரர்கள், ஆண்களுக்கு இணையான போட்டிக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்.
பாலின சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு போட்டி கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும். பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு, ஆடவர்களுக்கு வழங்கப்படும் போட்டிக் கட்டணமே வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.