
INDW vs ENGW: India has pulled off an unbelievable win over England (Image Source: Google)
இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் பிரண்ட் வீசிய 3ஆவது ஓவரை எதிர்கொண்ட ஷஃபாலி வர்மா, தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
பின் 20 ரன்கள் எடுத்டிருந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க திணறினர்.