Advertisement
Advertisement

INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் இலக்கு!

தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 19, 2024 • 16:59 PM
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள்
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர் என 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

Trending


இதில் அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா சர்வதெச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீராங்கனை எனும் மிதாலி ராஜின் சாதனையையும் சமன்செய்து அசத்தினார். அதன்பின் 18 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்கள் எடுத்த நிலையில் மந்தனா ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது 6ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 103 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய ரிச்சா கோஷ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement