
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியானது நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இடம் தோல்வியை சந்தித்து சாம்பியன் பட்டத்தை இழந்த அந்த அணியானது இந்த உலகக் கோப்பை தொடரிலாவது சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே தோல்வியை சந்தித்து மோசமான துவக்கத்தை பெற்றுள்ளது. கடைசியாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற இலங்கை அணியானது இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இதுவரை நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
ஏற்கனவே இந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திலேயே அந்த அணியில் இருந்து வெளியேறியது பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதோடு அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வநிந்து ஹசரங்கா இந்த உலககோப்பை தொடரில் விளையாடாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறிய வேளையில் தற்போது மேலும் ஒரு வீரர் இலங்கை அணியில் இருந்து அதிகாரவபூர்வமாக வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகி இலங்கை அணியை பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது.