Advertisement

பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தத ஐசிசி!

சென்னை மைதானத்தில் போட்டிகள் வேண்டாம் என பாகிஸ்தான் அணி வைத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதை உலகக்கோப்பை அட்டவணை தெளிவுபடுத்தியுள்ளது.  

Bharathi Kannan
By Bharathi Kannan June 27, 2023 • 15:08 PM
International Cricket Council: ICC World Cup Schedule Forced PCB To Join Heads
International Cricket Council: ICC World Cup Schedule Forced PCB To Join Heads (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 48 போட்டிகளை நடத்த ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 5 போட்டிகள் நடக்கவுள்ளன.

அதில் அக்டோபர் 8ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அதேபோல் அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதனிடையே ஐசிசி அட்டவணை வெளியாவதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள விரும்பவில்லை.

Trending


அதற்கு பதிலாக ஆஸ்திரேலியா அணியை சேப்பாக்கத்தை எதிர்கொள்ள விரும்புகிறோம். அதனால் பெங்களூரு மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டியை, ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தன் போட்டியாக மாற்றியமைக்க வேண்டும் என்று ஐசிசியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவையும், அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணி ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள வேண்டும். இந்த இரு போட்டிகளும் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும். ஆஃப்கானிஸ்தான் அணியிலும் தரமான 3 ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஒரேயொரு ஸ்பின்னர் மட்டுமே இருக்கிறார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் சுழல் அட்டாக்கை பாகிஸ்தான் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் பெங்களூரு சின்னசாமி மைதானம் அளவில் சிறியது என்பதால் அதிகளவில் சிக்சர்கள் விளாச முடியும். அதேபோல் பேட்டிங்கிற்கும் சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் அதிகளவில் அட்டாகி பிளேயர்கள் இருப்பதால், பாகிஸ்தான் அணிக்கு திண்டாட்டம் தான் என்று ரசிகர்கள் இப்போதே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வழக்கமாக பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே மைதானம் மாற்றப்படும். கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் திட்டமிடப்பட்டிருந்த சூழலில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டிய பிசிசிஐ கோரிக்கையை ஏற்று, ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement