
இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைப் பெற்றிருக்கிறது. பும்ரா, ஷமி, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என அனைத்துவிதமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட தரமான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது.
அதனால் தான் இந்திய அணியால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என உலகின் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெறமுடிகிறது. இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இதுதான் என்பதை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. பும்ரா 4 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் அடித்து, 95 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்தை 303 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. 2வது இன்னிங்ஸில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.