Advertisement

ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை போட்டுடைத்த முன்னாள் ஆஸி வீரர்!

ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் வெளியேறுவதற்கான காரணத்தை போட்டுடைத்த முன்னாள் ஆஸி வீரர்!

Bharathi Kannan
By Bharathi Kannan April 26, 2021 • 18:00 PM
IPL 2021: Australian Players Nervous Whether They Can Get Back To Australia, Says David Hussey
IPL 2021: Australian Players Nervous Whether They Can Get Back To Australia, Says David Hussey (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த சீசனில் இதுவரை 20 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று 8 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து டெல்லி அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நேரத்தில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் வீரர்கள் பலர் தொடரிலிருந்து வெளியேறி வருகிறார்கள். 

Trending


அதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்பின் பவுலர் அஸ்வின் சொந்த காரணத்தினால் இந்த சீசனில் இருந்து நேற்று வெளியேறினார். இவரை தொடர்ந்து பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஜாம்பா மற்றும் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனது சொந்த காரணத்தினால் வெளியேறுகிறார்கள் என்று ஆர்சிபி அறிவித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதற்கான காரணத்தை ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், தற்போதைய கேகேஆர் அணியின் ஆலோசகரான டேவிட் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஹஸ்ஸி,“ஆஸ்திரேலியா வீரர்கள் அனைவரும் தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக பதற்றமாக இருக்கிறார்கள். இதனால் தான் நாடு திரும்பி இருப்பார்கள். கரோனா குறித்து ஒவ்வொரு நொடியும் செய்தி வந்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் மருத்துவமனையில் இருப்பதை காண முடிகிறது. இதுகுறித்து நாங்கள் நேற்று இரவு பேசினாம். இந்த மாதிரியான நேரத்தில் நாம் விளையாடி அவர்களை சந்தோசப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement