
IPL 2021: CA, ECB officially confirm players' availability (Image Source: Google)
இந்தியாவில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து எஞ்சியுள்ள கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டு, தற்போது அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் ஐபிஎல் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு படையெடுத்துள்ளனர். அதன்படி நேற்றைய தினம் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்திய அணிகள் அங்கு சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டு வருகின்றன.