
ஐபிஎல் 14ஆவது சீசன் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 138/7 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக டேன் கிறிஸ்டியன் பார்க்கப்படுகிறார். கேகேஆர் இலக்கை துரத்திக் கொண்டிருந்த போது, டேன் கிறிஸ்டியன் வீசிய 12ஆவது ஓவரில் சுனில் நரேன் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இது அந்த அணி வெற்றி பெறுவதற்கு திருப்புமுணையாக இருந்தது.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் கிறிஸ்டியன் மீது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை அள்ளி வீசி வருகின்றனர். இதில் எல்லை மீறிய சில ரசிகர்கள் டேனியல் கிறிஸ்டியனின் மனைவி இன்ஸ்டா கணிக்கிற்கு சென்று, அவர் குறித்து மிக மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர்.