
IPL 2021: Dhawan's composure guides DC to seven-wicket win over Punjab Kings (Image Source: Google)
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, மயாங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பந்த் முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பிரப்சிம்ரான் சிங், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா என நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சோற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய மயாங்க் அகர்வால் இறுதிவரை போராடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது மட்டுமல்லாமல், 99 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னிங்ஸ் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை சேர்த்தது.