Advertisement
Advertisement
Advertisement

’தோனி தலைமையின் கீழ் விளையாடுவது அதிர்ஷ்டம்' - டூ பிளெசிஸ்

போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 22, 2021 • 14:39 PM
IPL 2021: Dhoni knows what he's doing, pleasure to play under him, says Faf
IPL 2021: Dhoni knows what he's doing, pleasure to play under him, says Faf (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனுமானவர் ஃபாப் டூ பிளெசிஸ். இவர் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான போட்டிடுல் 95 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், சென்னை அணி இமாயலய இலக்கை நிர்ணயிக்கவும் உறுதுணையாக அமைந்தார். 

இந்நிலையில் போட்டி முடிவுக்கு பிறகு பேசிய டூ பிளெசிஸ், மகேந்திரன் சிங் தோன்யின் தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய டூ பிளெசிஸ், நேற்றைய போட்டியின் எனது ஆட்டம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இதே போல் இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. அதிலும் கெய்க்வாட் மீண்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணிக்கு தேவையான வெற்றிடத்தை நிரப்பியுள்ளது. 

மேலும் கடந்த சில ஆண்டுகளாக நான் மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் விளையாடி வருகிறேன். இக்காலகட்டத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவரது தலைமையின் கீழ் பல ஆண்டுகளாக விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement